வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இலங்கை – வங்கதேச அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் ஓவரிலேயே குஷால் பெராரா ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, குஷால் மெண்டிஸ் (19), நிஷன்கா (41), சமர விக்ரமா (41) சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். சமரவிக்ரமா ஆட்டமிழந்த பிறகு, 6வது விக்கெட்டுக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். கிரீஸுக்கு வந்த அவர் அணிந்திருந்த ஹெல்மேட்டின் ஸ்டிராப் அறுந்திருந்தது. இதைத் தொடர்ந்து, தனது அணியினரிடம் வேறு ஹெல்மெட்டை எடுத்து வரக் கூறினார். அதற்கு தாமதமானதால், வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் உல் ஹசன், டைம்டு அவுட் கேட்டு நடுவரிடம் அப்பில் செய்தார்.
இதனை பரிசீலித்த நடுவர்கள் மேத்யூஸ் அவுட் என அறிவித்தனர். இதனால், அதிர்ந்து போன மேத்யூஸ், ஷகிப் உல் ஹசனிடம் மன்றாடினார். ஆனால், அவர் இசைந்து கொடுக்க மறுத்தால், வேறு வழியின்றி, ஒரு பந்தும் பிடிக்காமல், மைதானத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறினார்.
வெளியே சென்ற அவர், பவுண்டரி எல்லையின் அருகே தனது ஹெல்மெட்டை தரையில் ஓங்கி அடித்து, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு விக்கெட் இழந்த பிறகு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பேட்ஸ்மென் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது ஐசிசி விதியாகும். அதனை மீறியதால் மேத்யூஸ் அவுட் என அறிவிக்கப்பட்டார். இந்த முறையில் ஒரு வீரர் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.