இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவதூறாக பேசிய நபரை சக நண்பனே படுகொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து, டுவிட்டரில் கோலியை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னையில் பிளம்பிங் வேலை செய்து வந்துள்ளார். விக்னேஷும், அவரது நண்பர் தர்மராஜும் இரவு ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி குறித்து இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
மதுபோதையில் பேசிய விக்னேஷ், உன்னைப்போலத்தான் உன் ஆட்களும் இருக்கிறார்கள் என இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பொறுமை இழந்த தர்மராஜ் நண்பன் என்றும் கூட பார்க்காமல் விக்னேஷை ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிரிக்கெட் வீரர்களுக்காக சக நண்பனையே ஒருவர் கொலை செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமூக வலைதளமான டுவிட்டரில் #ArrestKohli எனும் ஹேஷ்டேக்கை கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ரோகித் ஷர்மா மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் ரொம்ப கோபக்காரர்கள் என்பதைப் போல, மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.