இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவதூறாக பேசிய நபரை சக நண்பனே படுகொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து, டுவிட்டரில் கோலியை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னையில் பிளம்பிங் வேலை செய்து வந்துள்ளார். விக்னேஷும், அவரது நண்பர் தர்மராஜும் இரவு ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி குறித்து இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
மதுபோதையில் பேசிய விக்னேஷ், உன்னைப்போலத்தான் உன் ஆட்களும் இருக்கிறார்கள் என இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பொறுமை இழந்த தர்மராஜ் நண்பன் என்றும் கூட பார்க்காமல் விக்னேஷை ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிரிக்கெட் வீரர்களுக்காக சக நண்பனையே ஒருவர் கொலை செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமூக வலைதளமான டுவிட்டரில் #ArrestKohli எனும் ஹேஷ்டேக்கை கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ரோகித் ஷர்மா மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் ரொம்ப கோபக்காரர்கள் என்பதைப் போல, மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.