ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆசிய விளையாட்டு போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய வங்கதேச அணி இந்திய பவுலர்களை எதிர்க்க முடியாமல் திணறினர். இதனால், அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாசிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஷ்னாய், ஷாபாஷ் அகமது தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர், கேப்டன் ருத்துராஜுடன் கைகோர்த்த திலக் வர்மா அதிரடி காட்டினர். இறுதியில் இந்திய அணி 9.2 ஓவர்களில் இலக்கை அடைந்து பைனலுக்கு முன்னேறியது. அதிரடியாக ஆடிய திலக் வர்மா 26 பந்துகளில் 55 ரன்களும், கெயிக்வாட் 26 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி பதக்கத்தை உறுதி செய்தது. ஏற்கனவே, மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.