ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 164 ரன்கள் எடுத்ததிலிருந்து இன்று ஐந்தாம் நாள் நடத்தை தொடங்கியது.
விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே இன்னிங்சை தொடங்கினர். விராட் கோலி 49 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய ஜடேஜா வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பொறுமையுடன் விளையாடிவந்த ரஹானே ஸ்டார்க் வீசிய பந்தில் அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை அடுத்து களமிறங்கிய ஷார்துல் தாக்குரும் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து இறங்கியவர்களும் ஆட்டமிழக்க இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் நேத்தன் லியோன் 4 விக்கெட்களும், போலண்ட் 3 விக்கெட்களும், ஸ்டார்க் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணி ஐசிசியின் அனைத்து வித கோப்பைகளையும் வென்றுள்ள அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.