ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் தங்கள் விருப்ப அணியை முன்னாள் வீரர்கள் வெளியிட்டுள்ளனர்.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது. தொடரை வென்றே ஆக வேண்டும் முனைப்பில் இரு அணியின் வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜுன் 7ம் தேதி ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. தற்போது வரை சாம்பியன்ஷிப் தரவரிசையில் 136 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்திலும், 99 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும் உள்ளது.
எனவே, இந்தத் தொடரை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று இரு அணிகளும் முயற்சிக்கும்.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, கேஎஸ் பரத், இஷான் கிஷான், சுப்மன் கில், புஜாரா, ஸ்ரேயாஷ் ஐயர், குல்தீப் யாதவ், ரவிச்சந்திர அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் ஆடும் லெவனில் யாரெல்லாம் இடம்பிடிக்கப்போகிறார்கள் என்ற குழப்பமும், சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.
கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக விளையாடுவதில் உறுதியாகியுள்ளது. அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடப் போவது கேஎல் ராகுலா..? அல்லது கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில்லா..? என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, டாப் ஆர்டரில் சூர்யகுமார் யாதவா..? ஸ்ரேயாஷ் ஐயரா..? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஸ்பின்னர்களும், வேகப்பந்து வீச்சாளர்களில் யார் இடம்பெறுவார்கள் என் கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இப்படியிருக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக், தனது விருப்ப அணியை அறிவித்துள்ளார்.
அதில், கேஎல் ராகுல், ரோகித் ஷர்மா, புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, கேஎஸ் பரத், அஸ்வின், அக்ஷர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இவரைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது விருப்ப அணியை வெளியிட்டுள்ளார். அதாவது, தினேஷ் கார்த்திக் அறிவித்த அணியில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். தொடக்க வீரராக கேஎல் ராகுலுக்கு பதிலாக கில்லை சேர்த்துள்ளார்.
எனவே, நாளை நடைபெறும் போட்டியில் யார் யாருக்கு இடம் இருக்கும் என்பது டாஸ் போடும் போதே தெரிய வரும்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.