சென்னை அணிக்கு மீண்டும் திரும்பிய பிராவோ.. ஆனா ஒரு சின்ன மாற்றம் : வெளியான சூப்பர் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 4:50 pm

சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

ஆனால் அவர் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்வார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது .


இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் 2023க்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார் .

எல் பாலாஜி ஒரு வருடம் தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு எடுக்கிறார். ஆனால் அவர் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் இடம்பெறுவார்.


இது குறித்து பிராவோ கூறுகையில், நான் இந்த புதிய பயணத்தை எதிர்நோக்குகிறேன், பந்துவீச்சாளர்களுடன் பணிபுரிவதை நான் ரசிக்கிறேன், மேலும் இது எனக்கு உற்சாகமாக இருக்கிறது.

வீரர் முதல் பயிற்சியாளர் வரை, நான் நினைக்கவில்லை., ​​நான் எப்போதும் பந்து வீச்சாளர்களுடன் பணிபுரிந்து, பேட்ஸ்மேன்களை விட ஒரு படி மேலே எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களையும் யோசனைகளையும் கொண்டு வர முயற்சிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் நான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அங்கமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

61 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பிராவோ. 130 ஸ்டிரைக் ரேட்டில் 1560 ரன்களை எடுத்துள்ளார்.

சென்னை அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். 2011, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் வெற்றிகளிலும், 2014 இல் சாம்பியன்ஸ் லீக் டி20 வெற்றியிலும் அவர் ஒரு அங்கமாக இருந்தார். ஐபிஎல் சீசனில் இரண்டு முறை (2013 மற்றும் 2015) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ