ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொல்கத்தா அணி முதல் அணியாக பிளே ஆஃப்பிற்குள் நுழைந்து விட்டது. நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி, 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்ததன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி, புள்ளிகள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றியைப் பொறுத்து, அந்த அணி டாப் இரண்டு இடங்களுக்குள் இருக்க உதவும்.
மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்ததாக தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் வரும் 18ம் தேதி விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவினால் ஆர்சிபி வெற்றி இலக்கை 18.1 ஓவர்களுக்கு முன்னதாக சேஸ் செய்யக் கூடாது அல்லது 18 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் வெற்றி பெறக் கூடாது.
ஐதராபாத், பெங்களூரு, லக்னோ போன்ற அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதில் லக்னோ எஞ்சியுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம். இதற்கு ஆர்சிபி, சென்னையை வீழ்த்த வேண்டும், ஐதராபாத் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவ வேண்டும்.
ஹைதராபாத் அணியின் அந்த தோல்வி பெங்களூரு மற்றும் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறவும் உதவும். (இதற்கு பெங்களூரு, சென்னையை வீழ்த்த வேண்டும்).அதேவேளையில், ஹைதராபாத் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேறி செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.