தொடர் தோல்வி… முன்னாள் வீரர்கள் விமர்சனம் : கனத்த இதயத்துடன் பாபர் அசாம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தொடர் தோல்வி… முன்னாள் வீரர்கள் விமர்சனம் : கனத்த இதயத்துடன் பாபர் அசாம் வெளியிட்ட அறிவிப்பு!!!

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா நடத்திய உலகக் கோப்பையில் நுழைந்தது. பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தனர். இதனால் உலகக் கோப்பையின் குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது.

பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் மிகவும் மோசமாக செயல்பட்டதால் கேப்டன் பாபர் அசாமை பல மூத்த நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறிவந்தனர்.

இந்நிலையில், பாபர் அசாம் அனைத்து வகையான போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். 2019-ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் பதவியேற்றார். கடந்த நான்கு ஆண்டுகள் மூன்று வடிவங்களிலும் பாகிஸ்தானின் வழக்கமான கேப்டனாக இருந்தார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்த தகவலை பாபர் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளார். அதில் “2019 இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து பாகிஸ்தான் கேப்டனாக எனக்கு அழைப்பு வந்த தருணம் எனக்கு இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. இன்று நான் அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன். இது கடினமான முடிவு, ஆனால் இதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

நான் ஒரு வீரராக மூன்று வடிவங்களிலும் பாகிஸ்தானுக்காக தொடர்ந்து விளையாடுவேன். எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன் புதிய கேப்டன் மற்றும் அணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன். இந்த குறிப்பிடத்தக்க பொறுப்பிற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர்-1 இடத்தை எட்டியது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டு முயற்சியின் விளைவாகும். இந்த பயணத்தின் போது அசைக்க முடியாத ஆதரவு அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

24 minutes ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

36 minutes ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

2 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

2 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

2 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

3 hours ago

This website uses cookies.