தென்னாப்ரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் வார்னர் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று மெல்போர்னில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு 100வது டெஸ்ட் ஆகும்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, கவாஜா 1 ரன்னிலும், லபுஸ்சேன் 14 ரன்னிலும் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.
ஆனால், வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் இணை சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது.
இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் தனது 25வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும், ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த 8வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில், 2வது நாளான ஆட்டம் தொடங்கியதும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் இரட்டை சதமடித்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த வார்னர், இரட்டை சதம் அடித்ததன் மூலம், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவரது 3வது இரட்டை சதம் இதுவாகும்.
மேலும், ஜோ ரூட்டுக்குப் பிறகு தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது 100வது டெஸ்டில் ரூட் 218 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரட்டை சதம் அடித்து அதனை வார்னர் கொண்டாடிய போது, அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் மேற்கொண்டு விளையாட முடியாத நிலை உருவானது. பின்னர், அவர் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.