கடந்த வாரம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தற்போது வெளியிட்ட அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, ஐபிஎல போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரோடு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஆளும் ஒய்எஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது.
அதன்படியே, கடந்த வாரம், அதாவது டிசம்பர் 28ம் தேதி ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்மூலம், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், குண்டூர் அல்லது மசூலிப்பட்டினத்தில் அவர் போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்த ஒரு வாரத்திலேயே அக்கட்சியில் இருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியில் சேர்ந்த 9 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து அம்பத்தி ராயுடு விலகி இருப்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடைய அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அம்பத்தி ராயுடுவுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், வேறு கட்சிகளின் மிரட்டலுக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.