பிரபல கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டு சிறை : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ட்விஸ்ட்..!!!
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நேபாள கிரிக்கெட் அணி வீரர் லாமிச்சானே, இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றவர்.
இந்த சூழலில், நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி காத்மாண்டு ஓட்டல் ஒன்றில் சந்தீப் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்ததாக தகவல் வெளியானது.
இந்த புகாரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் லாமிச்சானே (23 வயது), பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதன்பின், சந்தீப் லாமிச்சானே குற்றவாளி என காத்மாண்டு நீதிமன்றம் அறிவித்த நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, நேபாள கிரிக்கெட் வாரியம் சந்தீப் லாமிச்சானேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ஷிஷிர் ராஜ் தக்கல் அடங்கிய அமர்வு, பாலியல் வன்கொடுமை வழக்கில் மிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, NPR 300,000 அபராதம் செலுத்தவும் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு NPR 200,000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.