ஐபிஎல் தொடரில் தற்பொழுது டெல்லி கேபிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ வேட் – ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். இதில் முதல் ஓவரில் 1 ரன் மட்டும் அடித்து மேத்யூ வேட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து விஜய் சங்கர் களமிறங்கினார்.
பொறுமையாக ஆடிவந்த விஜய் சங்கர், 20 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேற, மறுமுனையில் இருந்த ஷப்மன் கில், சிறப்பாக ஆடத்தொடங்கினார். அவருடன் ஹர்திக் பாண்டியா இணைய, இருவரின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மலமலவென உயர்ந்தது. பின்னர் பாண்டியா 31 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, 6 பவுண்டரி, 4 சிஸ்ஸர்கள் அடித்து ஷப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய ராகுல் தேவாதியா 14 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தனர். 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர்கள், சொற்ப ரன்களில் வெளியே, கேப்டன் ரிஷப் பண்ட் 43 ரன்களில் அவுட் ஆகினார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் விரைவாக பெவிலியன் திரும்ப, லலித் யாதவ் 25, போவெல் 20 ரன்கள் எடுத்தனர். 19 ஓவரில்
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.