உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது அர்ஜென்டினா.
கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடந்து வருகிறது. லுசைல் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற 2வது கால் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா – நெதர்லாந்து அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
2வது பகுதி ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கான 2வது கோலை அடித்தார். இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து பதிலடி கொடுத்தார்.
பின்னர், வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அவரே இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார். இதனால், ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.