அடிலெய்ட்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் அட்டகாசமான கம்பேக்கை கொடுத்த விராட் கோலி இன்று வரை யாராலும் தடுக்க முடியாத வகையில் ஆடி வருகிறார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் கூட அதிக ரன்களை குவித்த வீரராக அவர் திகழ்கிறார்.
குறிப்பாக பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி தடுமாறிய போது விராட் கோலி ஆடிய இன்னிங்ஸ், அவரின் பயணத்திலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலியின் இந்த உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் சர்வதேச அளவில் சிறந்த வீரர் ஒருவரை தேர்ந்தெடுத்து ஐசிசி கவுரவப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 4 இன்னிங்ஸ் மட்டுமே ஆடிய அவருக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் கோலி 4 இன்னிங்ஸ்கள் தான் ஆடினார். இதில் நாட் அவுட்டாகாமல் மூன்று முக்கியமான இன்னிங்ஸை ஆடியுள்ளார். மாதத்தின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 49* ரன்களை விளாசினார். டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 82* ரன்களையும், நெதர்லாந்து அணிக்கு எதிராக 62* ரன்களையும் விளாசினார்.
விராட் கோலி மட்டுமின்றி இந்த விருதிற்காக மேலும் 2 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லர் கடந்த மாதத்தில் 7 இன்னிங்ஸ்களில் 303 ரன்களை விளாசியுள்ளார். மற்றொரு வீரர் ஜிம்பாப்வேவின் சிகந்தர் ராசா ஆகும். இவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தி வருகிறார். ஆனால் இவர்களை முந்தி கோலிக்கு விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து பேசிய கோலி, ஐசிசி-ன் விருதை பெறுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப்போன்றே கடந்த மாதம் சிறப்பாக விளையாடிய மற்ற வீரர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். இதே போல எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி என கோலி கூறியுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.