உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணி கில் (92), கோலி (88), ஸ்ரேயாஷ் ஐயர் (82) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 357 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மதுஷங்கா 5 விக்கெட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து, விளையாடிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் ரஜிதா (14), தீக்ஷானா (12), மேத்யூஸ் (12) மட்டும் இரட்டை இலக்கு ரன்களை எட்டினர். 5 வீரர்கள் ரன் எதுவுமின்றியும், 3 வீரர்கள் ஒற்றை இலக்கிலும் பெவிலியன் திரும்பினர். ஷமி 5 விக்கெட்டுக்களும், சிராஜ் 3 விக்கெட்டுக்களும், பும்ரா, ஷமி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.