வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட லிட்டன் தாஸ்… சிராஜ் & விராட் கோலி கொடுத்த பதிலடி.. அனல் பறக்கும் வங்கதேச டெஸ்ட்!!

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி வருகிறது.

இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று (டிச.,14) தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, 2வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர், ஜோடி சேர்ந்த அஸ்வின் – குல்தீப் யாதவ் இணை சிறப்பாக நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 350 ரன்களையே இந்திய அணி எட்டுமா..? என்று சந்தேகமாக இருந்த நிலையில், இருவரும் மளமளவென ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த அஸ்வின் (52), குல்தீப் யாதவ் (40) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 404 ரன்களை குவித்தது.

வங்கதேச அணி தரப்பில் தைஜு இஸ்லாம், மெஹிதி ஹாசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களும், எபடாத் ஹுசேன், ஹாலித் அகமது தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர், 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சிராஜ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷாண்டே ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, யஷிர் அலியின் (4) விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். இதனால், வங்கதேச அணி 5 ரன்னுக்கே 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

பின்னர், வந்த லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி விக்கெட்டை மேற்கொண்டு விளாமல் பார்த்துக் கொண்டார். அவர் 24 ரன்களை எடுத்திருந்த போது, 14வது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசினார். அப்போது, சிராஜ் வழக்கம் போல, முடிந்தால் பந்தை தொட்டுப் பார் என்பது போல ஏதோ பேசினார்.

இதனால், கடுப்பான லிட்டன் தாஸ், ‘என்ன கூறினாய் திரும்பச் சொல்லு’ என்பது போல ரியாக்ஷன் கொடுத்தார். இவர்களின் காரசார வாதத்தினால் மைதானத்தில் அனல் பறந்தது. இதனால் சூடான சிராஜ், அடுத்த பந்திலேயே லிட்டன் தாஸை போல்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

விக்கெட்டை கைப்பற்றிய சிராஜ் வாய் மீது கை வைத்தும், காது கேட்கவில்லை என்பதை போலவும் ரியாக்ஷ்ன் கொடுத்து பதிலடி கொடுத்தார். உடனே சிராஜின் கொண்டாட்டத்தில் விராட் கோலியும் பங்கேற்று, லிட்டன் தாஸை கிண்டலடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேவேளையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் பேட்ஸ்மேன் ராபின்சன்னுக்கு சிராஜ் மற்றும் கோலி பதிலடி கொடுத்த வீடியோவையும் நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதனிடையே, 2வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

விஜய் செய்தது போல், சினிமா தயாரிப்பதில் இருந்து உதயநிதி விலக வேண்டும் : இயக்குநர் பேரரசு!

இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…

10 minutes ago

நீ இந்தியாவுக்கு வந்த அவ்வளவு தான்…தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மிரட்டல்.!

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…

19 minutes ago

படத்தோட பேரு தெரியாம நடிச்சேன்.. ‘பெருசு’ பொருத்தமான தலைப்பு.. ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர் பேட்டி!

பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…

24 minutes ago

27 தடவை..தங்க கடத்தலுக்கு உதவியது யார்? அதிகாரிகளை திணறடித்த நடிகை ரன்யா ராவ்.!

தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…

1 hour ago

கடனை திருப்பி கேட்ட வங்கி.. விவசாய கடனை செலுத்த முடியாத திமுக நிர்வாகி விபரீத முடிவு!

திருவள்ளூர் மாவட்டம் வேலூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முத்துராஜ். 60 வயதான இவருக்கு சுசீலா என்ற மனைவியும், நான்கு மகன்கள்…

2 hours ago

This website uses cookies.