இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு இங்கிலாந்து அணி அவுட்டானது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி அபாரமாக ஆடி 477 ரன்கள் குவித்தது.
இதனால், 259 ரன்கள் பின்தங்கிய நிலையில், 3வது நாளில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்ப முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்டர்கள் திணறினர். இதனால், அந்த அணி 195 ரன்னுக்கு ஆல் ஆவுட்டாகினர். அதிகபட்சமாக ஜோ ரூட் மட்டும் நிலைத்து நின்று ஆடி 84 ரன்னுடன் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதோடு, 4-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
100வது போட்டியில் விளையாடிய அஸ்வின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.