புதிய நெருக்கடியில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி : கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தவால் புதிய நெருக்கடியில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜஹான் ஷமி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விட்டு பிரிந்து சென்றார்.

மேற்குவங்காளம் ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் ஹசின், ஷமி மீது விபச்சாரம் மற்றும் குடும்ப துஷ்பிரயோகம் தொடர்பாக புகார் அளித்தார்.

புகார் அளிக்கப்பட்ட பிறகு, ஷமி மீது ஜாமீனில் வெளிவர முடியாத வீட்டு துஷ்பிரயோகம் மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஷமி பல்வேறு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
எனினும், ஷமி தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். இந்த நிலையில் கொல்கத்தா 2018 ஆம் ஆண்டில், மாதாந்திர ஜீவனாம்சம் ரூ.10 லட்சம் கோரி ஹசின் வழக்கு தொடர்ந்தார். தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சமும், மகளின் பராமரிப்புக்காக ரூ.3 லட்சமும் கேட்டு இருந்தார்.

இந்த வழக்கில் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க கொல்கத்தா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ரூ.1.30 லட்சத்தில் ரூ.50,000 ஹசின் ஜஹானின் தனிப்பட்ட ஜீவனாம்சமாகவும், மீதமுள்ள ரூ.80,000 அவருடன் தங்கியிருக்கும் மகளின் பராமரிப்புச் செலவாகவும் இருக்கும்.

2020-21 நிதியாண்டிற்கான இந்திய வேகப்பந்து வீச்சாளரின் வருமான வரிக் கணக்கின்படி, அந்த நிதியாண்டில் அவரது ஆண்டு வருமானம் ரூ. 7 கோடிக்கு மேல் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் மாதாந்திர ஜீவனாம்ச கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் மிருகங்கா மிஸ்திரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், ஷமியின் ஆலோசகரான செலிம் ரஹ்மான், ஹசின் ஜஹான் ஒரு தொழில்முறை பேஷன் மாடலாக வேலை செய்வதன் மூலம் நிலையான வருமானம் ஈட்டுவதால், அந்த அதிக ஜீவனாம்சத் தொகைக்கான கோரிக்கை நியாயமானது அல்ல என்று கூறினார்.

இறுதியாக, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், திங்கள்கிழமை, மாதாந்திர ஜீவனாம்சம் தொகை ரூ.1.30 லட்சமாக நிர்ணயம் செய்தது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்தாலும், மாதாந்திர ஜீவனாம்சம் அதிகமாக இருந்திருந்தால் தான் நிம்மதியா இருந்திருப்பேன் என்று ஹசின் ஜஹான் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

9 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

10 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

11 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

11 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

11 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

12 hours ago

This website uses cookies.