ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடிய சதம் அடித்தார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் பெங்களூரூவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய இந்திய அணி, ஜெய்ஷ்வால் (4), கோலி (0), ஷிவம் துபே (1), சாம்சன் (0) என அடுத்தடுத்து சொற்ப ரன்னில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 22 ரன்னுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மா – ரிங்கு சிங் நிதானமாக ஆடினர்.
பிறகு, இறுதியில் இருவரும் அதிரடி காட்டத் தொடங்கினர். கேப்டன் ரோகித் ஷர்மா சதம் அடித்து அசத்தினார். இது டி20 கிரிக்கெட் போட்டியில் அவரது 5வது சதமாகும். இதன்மூலம், இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மறுமுனையில் ரிங்கு சிங்கும் அரைசதம் அடித்தார்.
இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோகித் ஷர்மா 121 ரன்னுடனும், ரிங்கு சிங் 69 ரன்னுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.