இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் 12-வது ஓவரில் லஹிரு குமாரிடம் போல்ட் ஆகி 44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 111 ரன்கள் எடுத்தனர். பின்னர், ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடியதால் சதம் விளாசுவர் என எதிர்பட்டப்பட்ட நிலையில் 56 பந்தில் 89 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும்.
பின்னர் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடிய 25 பந்தில் அரைசதம் விளாசி 57 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர் நிஷாங்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புவனேஷ்குமார் வீசிய முதல் பந்தில் அவுட்டாக, அடுத்து வந்த மிஷாரா 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த அசலங்காவுடன் லியாங்கே ஜோடி சேர்ந்தனர். ஆனால் லியாங்கே 11 ரன்னில் வெங்கடேஷ் பந்தில் வெளியேற, சாண்டிமால் அசலங்காவுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தல் சாண்டி மாலும் ஜடேஜா சுழலில் சிக்க, அடுத்து வந்த சனாகாவும் பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய அசலங்கா அரைசதம் அடித்து விளாசினார். அப்போது வெங்கடேஷ் ஐயர் பந்தில் கருணா ரத்னே பெவிலியன் திரும்ப, சமீரா அசலங்கா ஜோடி நிதானமாக ஆடியது. முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
This website uses cookies.