ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி புதிய சாதனை படைத்துள்ளது.
மொகாலியில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய லக்னோ அணி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது.
ஸ்டொயினிஸ் (72), மேயர்ஸ் (54), பூரண் (45), பதோனி (43) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன்மூலம், ஐபிஎல் தொடரில் ஒரு அணி அதிகபட்சமாக குவித்த 2வது அதிகபட்ச ஸ்கோரை லக்னோ அணி (257) அடித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூரூ அணி புனேவுக்கு எதிராக 263 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்து வருகிறது.
அதேபோல, ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகளை விளாசிய அணி என்ற சாதனையிலும் 2வது இடத்தை லக்னோ பெற்றுள்ளது. 27 4s, 14 சிக்சர்களுடன் மொத்தம் 41 பவுண்டரிகளை அந்த அணி அடித்துள்ளது. முதலிடத்தில் பெங்களூரூ அணி 21 4s, 21 சிக்ஸர்களுடன் மொத்தம் 42 பவுண்டரிகளை விளாசியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.