ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை – லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய லக்னோ அணி சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்தது. அதிரடி வீரர் மேயர்ஸ் (14), வோரா (10), குர்னல் பாண்டியா (0), ஸ்டொயினிஸ் (6), கரன் சர்மா (9) என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். அந்த 44 ரன்னுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.
இதனிடையே, 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிகோல்ஸ் பூரன், பதோனி சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வருகிறது.
முன்னதாக, டாஸ் போடும் போது சென்னை அணியின் கேப்டன் தோனியிடம், இந்த ஐபிஎல் தொடருடன் நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களா..? என வர்ணனையாளர் டேனி மாரிசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிரித்தபடி பதிலளித்த தோனி, “இது எனது கடைசி சீசன் என நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல,” எனக் கூறினார். இதனை கேட்ட மாரிசன், அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் என்று ரசிகர்களை நோக்கி கூறினார். இதனால், மைதானத்தில் இருந்த தோனி ரசிகர்கள், பலத்த கரகோஷத்தை எழுப்பினர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.