பெங்களூரூவுக்கு எதிரான எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி சரித்திர சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரூ – ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. ஹெட் (102), கிளாசன் (67) ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்மூலம், டி20 போட்டியில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஏற்கனவே, நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்களை ஐதராபாத் அணி குவித்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. தற்போது, அந்த சாதனையை ஐதராபாத் அணியே முறியடித்துள்ளது.
மேலும் படிக்க: அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் தான் வாக்கு சேகரிக்கிறாங்க ; கோவையில் கருணாஸ் பிரச்சாரம்!!
தொடர்ந்து, பேட் செய்த பெங்களூரூ அணிக்கு, தினேஷ் கார்த்திக் (83), டூபிளசிஸ் (62), விராட் கோலி (42) ஆகியோர் எவ்வளவோ போராடியும், அந்த அணியால்7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
அதுமட்டுமில்லாமல், ஒரு போட்டியில் அதிகபட்ச (4,6) பவுண்டரிகளை விளாசிய ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் – தென்னாப்ரிக்கா (81) ஆட்டத்தை இந்தப் போட்டி சமன் செய்தது. அதேபோல, அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட போட்டியின் பட்டியலில் ஐதராபாத் – மும்பை (38) ஆட்டத்தையும் சமன் செய்தது.
மேலும், ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து அதிகபட்ச ஸ்கோரை (549) குவித்த ஆட்டமாக இது அமைந்துள்ளது.
அதேவேளையில், ஐபிஎல் வரலாற்றி மோசமான சாதனையை பெங்களூரூ அணி படைத்துள்ளது. பேட்டிங்கில் குறைந்தபட்சமாக (49) ரன்களை குவித்த அணி என்ற மோசமான சாதனையை ஏற்கனவே படைத்திருந்தது. அதேபோல, அதிகபட்ச (287) ரன்களை வாரி வழங்கிய அணியாகவும் தற்போது மாறியுள்ளது. இது ஆர்சிபி ரசிகர்களை மேலும் மேலும் வலியை உண்டாக்கியுள்ளளது.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.