ஐபிஎல் போட்டி எல்லாம் ஜூஜிபி மேட்டர்… அதைவிட இதுதான் கஷ்டம் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் விமர்சனம்!!

ஐபிஎல்லை விட பிஎஸ்எல் தான் கடினமான கிரிக்கெட் தொடர் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான். இவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறார். டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், ஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) மிகவும் கடினமானது என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிஎஸ்எல் தொடர் வெற்றியடையாது என அதை தொடங்குவதற்கு முன்னர் சில பேச்சுகள் இருந்தன. ஆனால் ஒரு வீரராக என்னைப்பொறுத்தவரை பிஎஸ்எல் உலக அரங்கில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

உண்மை ஐபிஎல்லும் உள்ளது. ஆனால் பிஎஸ்எல்லில் விளையாடிய உலகெங்கிலும் உள்ள வீரர்களிடம் பிஎஸ்எல் கடினமா? இல்லை ஐபிஎல் கடினமா? என கேட்டால் அவர்கள் பிஎஸ்எல் தான் மிகவும் கடினமானது என கூறுவர் என்றார்.

மேலும், பிஎஸ்எல்லில் ஆடும் வீரர்கள் பலர் சர்வதேச அளவில் பெஞ்சில் உட்காரவைக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் அணி சிறந்த மாற்று வீரர்களை கொண்டுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் பிஎஸ்எல் தான். பிஎஸ்எல் அதற்கான பெருமையைப் பெற வேண்டும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

ஐபிஎல் போட்டி கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை கடந்து உலகில் வெற்றிகரமான தொடராக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 16வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இந்த மாதம் கொச்சியில் வரும் 23ந் தேதி நடைபெறுகிறது. பிஎஸ்எல் 2016 ஆம் ஆண்டில் தொடங்கியது.

பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐபிஎல்லில் 2008 ம் ஆண்டு கலந்து கொண்டனர். அதன் பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஐபிஎல்லில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

2 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

2 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

3 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

3 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

4 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

4 hours ago

This website uses cookies.