கோலி ‘போலி பீல்டிங்’ செய்தது 100% உண்மை : வங்கதேச அணிக்கு ஆதரவாக களமிறங்கிய இந்திய அணியின் முன்னாள் வீரர்!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பிறகு விராட் கோலி மீது வங்காளதேச அணி வீரர் நூருல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். அதாவது வங்காளதேச அணியின் இன்னிங்ஸ் போது விராட் கோலி தனது கைகளில் பந்து இல்லாமலேயே ரன் அவுட் செய்ய முயல்வது போன்று நடித்து பேட்ஸ்மேனை குழப்பினார் என்பதே அந்த குற்றச்சாட்டு.


ஆட்டத்தின் 7வது ஓவரில் அக்‌ஷர் படேல் வீசிய பந்தை லிண்டன் தாஸ் ஆஃப் சைடில் அடித்துவிட்டு ரன் ஓடினார். பந்து நேராக பவுண்டரி எல்லையில் இருந்த அர்ஷ்தீப் சிங்கிடம் சென்றது.

அதனை அவர் தினேஷ் கார்த்திக்கிடம் வீசினார். ஆனால் நடுவே இருந்த விராட் கோலி, பந்து தன் கையில் இல்லை என்ற போதும், ஸ்ட்ரைக்கர் முனைக்கு த்ரோ செய்வது போன்று பாவனை செய்தார்.

இதனால் பேட்ஸ்மேன்கள் குழம்பினர்.இது குறித்து வங்காளதேச வீரர் நூருல் ஹசன் கூறுகையில், நிச்சயமாக மழைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது மைதானத்தில் இருந்த ஈரப்பதம் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இந்தப் போட்டியில் ஒரு போலியான த்ரோ இருந்தது. அதன்மூலம் எங்களுக்கு 5 ரன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.

ஐசிசி விதி 41.5.1-படி ஒரு பேட்ஸ்மேனை வேண்டுமென்றே கவனச்சிதறல் செய்ய தூண்டுவது, ஏமாற்றுவது, அவர் ஓடும்போது குறுக்கே சென்று தடையாக நிற்பது போன்றவை தவறாகும். அதற்கு பெனால்டியாக பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில் எந்தவொரு கவனச்சிதறல் அல்லது ஏமாற்றுதல் வேண்டுமென்றே செய்யப்பட்டதா இல்லையா என்பதை நடுவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று ஐசிசி விதி 41.5.2 கூறுகிறது. ஆனால் நேற்று நடுவர்கள் இதை கவனிக்காததால் களத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, கோலி ‘போலி பீல்டிங்’ செய்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து யூடியூப் வீடியோ ஒன்றில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ” கோலி பந்தை வீச முயன்ற விதத்தை பார்க்கும் போது அது 100% போலி ஃபீல்டிங் தான் எனத் தெரிகிறது.

நடுவர்கள் அதை பார்த்திருந்தால், வங்காளதேச அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டியாக கிடைத்திருக்கும். நாமும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று இருந்தோம். ஆனால் நாம் தப்பித்துள்ளோம். ஆனால் அடுத்த முறை யாராவது இதைச் செய்தால் நடுவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வங்காளதேச அணி முறையிட்டது சரியே. ஆனால் இப்போது எதுவும் செய்ய முடியாது என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

5 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

6 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

6 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

7 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

7 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

7 hours ago

This website uses cookies.