கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் 15வது சீசன்: கொல்கத்தாவை எதிர்கொள்வாரா சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன்?

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் மும்பையில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியாவின் முக்கிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 15வது தொடரில் இந்தமுறை லக்னோ, குஜராத் என 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால், மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. மெகா ஏலத்துக்குப் பிறகு அனைத்து அணிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய கேப்டன்கள், புதிய வீரர்கள், அறிமுக இளம் வீரர்கள் என பலரும் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.

மும்பை, ராஜஸ்தான், டெல்லியை தவிர மற்ற அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிகளைக் காண 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. மார்ச் 31க்கு பிறகு கொரோனா கட்டுபாடுகள் முடிவுக்கு வர உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாடுவதில் மாற்றமில்லை. முன்பு 55 லீக் ஆட்டங்கள் நடந்தன. இந்த முறை அது 70ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 65 நாட்களில் 70 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் நடக்க உள்ளன. எல்லா ஆட்டங்களும் மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன், டிஒய் பாட்டீல் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன.

வான்கடே, டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் தலா 20 போட்டிகள், பிராபோர்ன், எம்சிஏ ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகள் நடத்தப்படுகிறது. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள், இறுதி ஆட்டம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. லீக் சுற்று ஆட்டங்கள் மே 18ம் தேதியுடன் முடிவடைகிறது. பைனல் மே 29ல் நடைபெறும்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…

விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…

1 hour ago

உடம்பில் ஆடையே இல்லாமல் படப்பிடிப்பிற்கு வந்த நம்பியார்! எம்ஜிஆர்தான் காரணமா?

எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…

2 hours ago

ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் : வழக்கறிஞரின் பரபரப்பு காட்சி!

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…

2 hours ago

முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி எம்பி குறித்து ஆபாசமாக பேசி வீடியோ பதிவு : அதிர்ச்சி சம்பவம்!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…

3 hours ago

இளம்பெண்ணை விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் : கோவிலுக்கு சென்ற போது விபரீதம்!

கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…

3 hours ago

AI தொழில்நுட்பத்தால் உயிர் பிழைக்கும் தனுஷ்? ஹிட் படத்தின் கிளைமேக்ஸை மாற்றும் படக்குழு!

இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…

4 hours ago

This website uses cookies.