விமானத்தில் பயணம் செய்த போது மயங்கி விழுந்த மயங்க் அகர்வால்.. மருத்துவமனையில் அனுமதி!

விமானத்தில் பயணம் செய்த போது மயங்கி விழுந்த மயங்க் அகர்வால்.. மருத்துவமனையில் அனுமதி!

தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார்.

அங்கு , அவர் ஏறிய இண்டிகோ விமானத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் பருகியதாக தெரிகிறது. உடனடியாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வாயில் புண் ஏற்பட்டுள்ளது. மயங்க் அகர்வால் உடல் நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்து விமானம் மீண்டும் அகர்டலாவற்கு திருப்பப்பட்டது.

மயங்க் அகர்வால் அகர்டலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதை அடுத்து, மயங்க் அகர்வால் உதவியாளர் இந்த விஷயத்தை , முழுதாக விசாரிக்க அகர்தலா காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார் என மேற்கு திரிபுரா காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் தனியார் செய்தி நிறுவனத்திடம் தகவல் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், விமானத்தில் அமர்ந்த போது எதிரே இருந்த ஒரு பையில் தண்ணீர் இருந்ததாகவும், அதனை மயங்க் அகர்வால் குடித்தார் என்றும், அதன் மூலம் திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவரது உதவியாளர் கூறியதாகவும், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து, மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் கிரண் கிட்டே கூறுகையில், மயங்க் அகர்வால் புகாரை போலீசார் ஏற்றுக் கொண்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை நாங்கள் தீவிரமாக விசாரிப்போம். அவரது மேலாளரின் கூற்றுப்படி அவர் நாளை பெங்களூரூ செல்ல உள்ளார். இதற்கிடையில் அகர்தலாவில் இன்று சிறந்த சிகிச்சையை வழங்குவோம் என்று கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

14 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

15 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

15 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

15 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

16 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

16 hours ago

This website uses cookies.