அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து அணிகளும் தங்களின் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவ.,26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த காலகட்டத்தில் வீரர்களை பரிமாற்றம் செய்யும் வாய்ப்பும் அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி குஜராத் அணியில் இருந்த ஆவேஸ் கானை வாங்கி விட்டு, தேவ்தத் படிக்கல்லை ராஜஸ்தான் அணி கொடுத்துள்ளது.
இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்றார். அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் அந்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது. அதேபோல், கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி பைனலில் தோற்று 2ம் இடம் பிடித்தது.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை அணி எடுக்கும் பட்சத்தில், ரஷித்கான், மில்லர் அல்லது கில் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.