விளையாட்டு

வரலாற்றை உருவாக்கிய நியூசிலாந்து.. மாற்றிய இந்தியா.. டெஸ்ட் தொடர் சாதனை!

இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

புனே: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி விளையாடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. மேலும், சில வரலாற்று நிகழ்வுகளும் நடைபெற்று உள்ளன.

இதன்படி, சுமார் 69 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதாவது, 1955ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.

இதையும் படிங்க: சொந்த மண்ணில் இந்திய அணி மோசமான சாதனை.. 5 பேர் டக்அவுட்.. அசுர வேகத்தில் நியூசி..!!

அப்போது முதல் 12 முறை டெஸ்ட் தொடரில் இந்தியாவில் விளையாடினாலும் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றவில்லை. இந்த நிலையில் தான், முதல் முறையாக இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இப்படியொரு சாதனையை நிகழ்த்த, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 18 முறை தொடர் வெற்றியை முறியடிக்க முற்பட்டு இருக்கிறது. அந்த வகையில், 18 முறையும் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த நியூசிலாந்து அணி, 20-ஐ கூட நெருங்க முடியாமல் தோல்வியைச் சந்தித்து உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

7 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

7 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

8 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

9 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

10 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

12 hours ago

This website uses cookies.