பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் நாள் பேட்டிங், வரலாற்று சாதனை படைக்கும் வகையில் இருந்தது.
முதல் நாளிலேயே க்ரவுலி (122), டக்கெட் (107), போப் (108), ப்ரூக்ஸ் (153) ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதனால், அந்த அணி முதல் இன்னிங்சில் 657 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, 2வது நாளில் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள், இமாம் உல் அக், அப்துல்லா சஃபிக் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 187 ரன்களை சேர்த்திருந்தது.
இந்த நிலையில், 3வது ஆட்டம் தொடங்கியதும் அப்துல்லா சஃபிக் (114), இமாம் உல் அக் (121) சதமடித்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, அசார் அலி (27), சவுத் ஷகில் (37) ஆட்டமிழந்தாலும், நிதானமாக ஆடி கேப்டன் பாபர் ஆசம் (136) சதமடித்து ஆட்டமிழந்தார்.
ரிஸ்வான் (29), நஷீம் (15) என ஆகியோர் விக்கெட்டை இழந்த நிலையில், 3வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்துள்ளது.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.