கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில், நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச் 3 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா, 30வது பந்தில் அரைசதத்தை கடந்து, 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ரிங்கு சிங் 23 ரன்கள் எடுத்தார். டெல்லி வீரர் குல்தீப் யாதவ் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி துவக்க வீரர் டக் அவுட் ஆனார்.
வார்னர் வழக்கமாக அதிரடியை காட்டினார். ஒரு பக்கம் மார்ஷ் 13 ரன்னில் வெளியேற, லலித் யாதவ் 22 ரன்களை எடுத்து அவுட் ஆனார். கேப்டன் பண்ட் 2 ரன்னில் வெளியேற, பவல் அதிரடி காட்டினார். ஒரு பக்கம் வார்னரும் அவுட் ஆக, விக்கெட்டுகள் சரிந்து திணறிய போது, அக்ஷர் படேல் அதிரடியாக விளையாடினார்.
ஆனால் நிலைத்து நிற்கவில்லை, இருந்தாலும் பவல் நிலைத்து ஆடி வெற்றிக்கனியை பறித்தார். 19 ஓவரில் டெல்லி அணி 150 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பற்றியது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
This website uses cookies.