இந்தியாவின் உள்கிரிக்கெட் தொடரில் ஒன்றான ரஞ்சி கோப்பை தொடரின் 2வது அரையிறுதியில் மும்பை – உத்தரபிரதேச அணிகள் விளையாடி வருகின்றன.
பெங்களூரூவில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 393 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் தம்ரோர் 115 ரன்களும், ஜெய்ஸ்வால் 100 ரன்களும் குவித்தனர்.
இதைத் தொடர்ந்து, விளையாடிய உத்தரபிரதேச அணி 180 ரன்களுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, இமாலய ரன்களுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணிக்காக களமிறங்கிய ஜெய்ஸ்வால், தான் சந்தித்த 53 பந்துகளில் ரன்களே எடுக்காமல் இருந்தார்.
பின்னர், 54 பந்தில் பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை தொடங்கியதுடன், செஞ்சூரி அடித்தது போன்று பேட்டை உயர்த்தி காண்பித்தார். இதனால், மைதானம் முழுவதும் கைதட்டல் பறந்தது. குறிப்பாக, மும்பை அணியினரின் டக் அவுட்டில் கைதட்டி அமர்க்களப்படுத்தினர்.
பின்னர், தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் 2வது இன்னிங்சிலும் சதமடித்தார். அவர் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், மும்பை அணிக்காக இரு இன்னிங்சில் சதமடித்த 4வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக, ரோகித் ஷர்மா, ரகானே மற்றும் வாசிம் ஜாபரை ஆகியோர் இந்த சாதனை செய்துள்ளனர்.
தற்போது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 449 ரன்கள் எடுத்துள்ள நிலையில், 662 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.