கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிக்கிய போது, அவரது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டெல்லியில் இருந்து தனது சொகுசு காரின் மூலம் உத்தரகாண்ட்டில் உள்ள ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடவும், தாயாருக்கு சர்ப்பைரஸ் கொடுக்கும் நோக்கில், காரை பண்ட்டே ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் திடீரென்று கட்டுப்பாட்டை கார் இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதி சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட்டின் தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார்.
காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ரிஷப் பண்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களால் ரிஷப் பண்ட் காரில் கொள்ளையடிக்கபட்டதாக சில வதந்திகள் வெளியாகின.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விபத்தை நேரில் பார்த்த நபர் கூறுகையில், சாலையில் கிடந்த அனைத்து பணத்தையும் எடுத்து இந்திய கிரிக்கெட் வீரரிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைத்ததாகக் கூறினார். மேலும் “அவரது பணம் சாலையில் சிதறியது நாங்கள் அதை எடுத்து அவரது கைகளில் கொடுத்தோம்” என்று என பேருந்து ஓட்டுநர் ஒருவரும் தெரிவித்தார்.
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
This website uses cookies.