பரபரப்பான 3 பந்துகள்… கடைசி நிமிடத்தில் ஷாக் கொடுத்த ரஷித் கான் : இலங்கையிடம் போராடி ஆப்கானிஸ்தான் தோல்வி!
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 6வது போட்டியில் குரூப் பி-யில் உள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியானது இலங்கையில் உள்ள லாகூர் மைதானத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்திருந்தது.
அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 92 ரன்கள் எடுத்திருந்தார். பதும் நிஸ்ஸங்க 41 ரன்களும், திமுத் கருணாரத்ன 32 ரன்களும், அசலங்கா 36 ரன்களும், துனித் வெல்லலகே 33 ரன்களும், மஹீஷ் தீக்ஷன 28 ரன்களும் எடுத்திருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக குல்பாடின் நைப், 4 விக்கெட்களை வீழ்த்தினார். ரஷீத் காண விக்கெட்டுகளையும், முஜீப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதில் 50 ஓவரின் 292 எண்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறி, அடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரஹ்மத்துல்லா மற்றும் இப்ராஹிம் ஆகியோர் 4 மற்றும் 7 ரன்கள் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து ஆடிய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே வந்தன.
குல்பாடின் நைப் 22 ரன்களும், ரஹ்மத் ஷா 45 ரன்களும், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 59 ரன்களும், நஜிபுல்லாஹ் சத்ரான் 23 ரன்களும், முகமது நபி 65 ரன்களும், கரீம் ஜனத் 22 ரன்களும், ரஷித் கான் 27 ரன்களும் எடுத்து இருந்தனர். 37 ஓவர் முடிந்த நிலையில் வெற்றிக்கு மிக அருகில் இருந்த சமயத்தில் ரஷீத் கான் ரன் அவுட் ஆக, சில்வா வீசிய பந்தில் அடுத்து வந்த முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆக, இறுதியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணி 289 ரன்கள் எடுத்து இருந்தது. இலங்கை அணி சார்பாக கசுன் ராஜித 4 விக்கெட்களையும், சில்வா மற்றும் துனித் வெல்லலகே ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.