நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் ஓரளவுக்கு இருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் சரிந்தன. ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம், மிக இளவயதில் (23) இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக இஷாந்த் கிஷாந்த் 24 வயதிலும், ரோகித் சர்மா 26 வயதிலும் இந்த சாதனையை படைத்தனர்.
அதுமட்டுமில்லாமல், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் அடித்த அதிகபட்ச ஸ்கோரை (186 நாட்அவுட்) முறியடித்து, சுப்மன் கில் அசத்தியுள்ளார். மேலும், ஐதராபாத் மைதானத்தில் தனிமனித அதிகபட்ச ஸ்கோராக 186 ரன்களை சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்தார். அதனை தற்போது கில் முறியடித்துள்ளார்.
இறுதியில் கில் 208 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.