நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் ஓரளவுக்கு இருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் சரிந்தன. ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம், மிக இளவயதில் (23) இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக இஷாந்த் கிஷாந்த் 24 வயதிலும், ரோகித் சர்மா 26 வயதிலும் இந்த சாதனையை படைத்தனர்.
அதுமட்டுமில்லாமல், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் அடித்த அதிகபட்ச ஸ்கோரை (186 நாட்அவுட்) முறியடித்து, சுப்மன் கில் அசத்தியுள்ளார். மேலும், ஐதராபாத் மைதானத்தில் தனிமனித அதிகபட்ச ஸ்கோராக 186 ரன்களை சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்தார். அதனை தற்போது கில் முறியடித்துள்ளார்.
இறுதியில் கில் 208 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.