ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நேற்று நடந்த மும்பை-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பல்வேறு சரித்திர சாதனைகளை படைத்துள்ளது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கதில் இருந்தே அதிரடி காட்டியது. க்ளாசன் 34 பந்துகளில் 80 ரன்களும், அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ரன்களும், ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களும், மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு பெங்களூரூ அணி 263 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
இதைத் தொடர்ந்து, விளையாடிய மும்பை அணியும் அதிரடி காட்டியது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்து வெறும் 31 ரன்களில் மட்டுமே தோல்வியை தழுவியது. இதன்மூலம், ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 523 ரன்கள் குவித்திருப்பது ஐபிஎல் வரலாற்றில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டி20 வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.
அதுமட்டுமில்லாமல், நேற்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்சர்கள் அடித்துள்ளன. ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய போட்டியாகவும் இது அமைந்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.