டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து, பாகிஸ்தான் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது.
சிட்னியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இருப்பினும், மிட்சல் (53 நாட் அவுட்), கேப்டன் வில்லியம்சன் (46) ஆகியோர் கைகொடுக்க, 20 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து, பேட் செய்த பாகிஸ்தான் அணி இலக்கை நோக்கி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. பாகிஸ்தான் வீரர்கள் கொடுத்த வாய்ப்புகளை நியூசிலாந்து அணியினர் தவறவிட்டனர். இதனால், கேப்டன் பாபர் ஆசம், ரிஷ்வான் இணை முதல் விக்கெட்டுககு 105 ரன்கள் சேர்த்தது.
பாபர் ஆசம் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, 19 பந்துகளுக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், போல்ட் வீசிய டாஸ் பந்தை அடித்த ரிஸ்வான் பிலிப்ஸிடம் கேட்ச்சாகி அவுட்டானார். ஆனால், இதனை நோ-பால் என்று அப்பில் செய்தனர். ஆனால், 3வது நடுவரால் அவுட் வழங்கப்பட்டது. ஏற்கனவே, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நவாஸ் வீசிய டாஸ் பந்தை, விராட் கோலி நோ-பால் கேட்ட சம்பவம் இங்கு நினைவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, பரபரப்பான ஆட்டத்தில் 6 பந்துகளுக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, சவுதி ஒரு வைடு வீசினார். இதற்கு அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்து மசூத் பாகிஸ்தானை வெற்றி பெறச் செய்தார்.
இதே நிலைமையில்தான், அதாவது ஒரு பந்துக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் நவாஸ் வைடு வீசினார்.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்ந்த சில காட்சிகள் பாகிஸ்தானுக்கு இன்றைய நிகழ்வில் அரங்கேறியது சிட்னியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.