டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் தடைபட்டால், கோப்பை யாருக்கு என்பது குறித்த புதிய விதிமுறைகளை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து பாகிஸ்தான் அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. இன்று நடக்கும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, 2வது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ஒருவேளை இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் இரு அணிகளும் 10 ஓவர்களுக்கு மேல் விளையாடி இருந்தால் மட்டுமே, வெற்றியாளர் அறிவிக்கப்படும். இல்லையெனில் ஆட்டம் ரத்து செய்யப்படும். குறிப்பாக, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும், இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.
சூப்பர் 12 சுற்றின் பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதி ஆட்டம் மழையால் தடைபட்டால், இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது ஐசிசியின் புதிய விதிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த புதிய விதிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
பொதுவாக, அரையிறுதி, இறுதிப் போட்டி உள்ளிட்ட முக்கிய ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், அதனை மாற்றி கோப்பையை பிரித்து வழங்குவது சரியாக இருக்காது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.