டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி ஏமாற்றி வெற்றி பெற்றதாக கூறி வரும் பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று அடியெல்டில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, கோலி (64 நாட் அவுட்), ராகுல் (50) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது.
பின்னர், கடின இலக்கை நோக்கி விளையாடி வங்கதேச அணி முதல் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியது. இந்த சூழலில், மழை குறுக்கிட்டதால், D/L முறைப்படி ஓவரும், இலக்கும் குறைக்கப்பட்டது.
அதன்படி, 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக தீர்மானிக்கப்பட்டது. அதாவது, வங்கதேச அணி 54 பந்துகளில் 85 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. பின்னர், மீண்டும் ஆட்டம் தொடங்கிய பிறகு, இந்திய அணியின் கையே ஓங்கியது. வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.
இந்தப் போட்டியில், கோலி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது நோ-பால் கேட்டதும், பீல்டிங் செய்யும் போது ஃபேக் ஃபீல்டிங் செய்ததாகவும் கூறி, வங்கதேச அணி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களோடு, பாகிஸ்தான் ரசிகர்களும் சேர்ந்து இந்திய வீரர்களையும், பிசிசிஐ-யும் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் செய்ததாக கூறி வரும் பாகிஸ்தான், வங்கதேச அணி ரசிகர்களுக்கு, இந்திய அணியின் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் போட்டியின் போது, விக்கெட் கீப்பர் டீ-காக் விநோதமான முறையில் ஏமாற்றி, ஃபக்கர் ஜமானின் விக்கெட்டை எடுத்த வீடியோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.
மேலும், இதற்கு பெயர்தான் FAKE FIELDING என்றும், விராட் கோலி செய்ததை குறை சொல்ல வேண்டாம் என்றும் இந்திய ரசிகர்கள் கோலிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
This website uses cookies.