இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, விளையாடிய இந்திய அணி முதல் நாளில் சுமார் 400 ரன்னுக்கு மேல் குவித்தது. இதன்மூலம், 88 ஆண்டுகளுக்கு பின் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் அன்று ஒரே அணி 400 ரன்களுக்கு மேல் ரன் குவித்தது பெரும் வரலாற்று சாதனை ஆகும். இறுதியில் முதல் இன்னிங்சில் 428 ரன்கள் சேர்த்தது. ஷூபா சதீஷ் (69), ரோட்ரீக்ஸ் (68), யாஷிகா பாட்டியா (66), தீப்தி ஷர்மா (67) ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, 136 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தீப்தி ஷர்மா 5 விக்கெட்டும், ரானா 2 விக்கெட்டும், பூஜா வஸ்திரேகர், ரேணுகா சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதன்மூலம், 479 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
மெகா இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்து திணறியது. இறுதியில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. 17 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காத அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
அதோடு, ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச (347) ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய படைத்துள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.