16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, டெல்லி அணியில் முதலில் டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். வார்னரும் பிருத்வி ஷாவும் இணைந்து அதிரடியாக விளையாடி 6 ஓவர்களில் 61 ரன்களை குவித்தனர். பின், வார்னர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரையடுத்து களமிறங்கிய ரிலீ ரோசோவ், பிருத்வி ஷாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடிய நிலையில், பிருத்வி ஷா அரைசதம் கடந்து தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோசோவும் சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்க விட்டு 80 ரன்களை கடக்க, போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது.
முடிவில், டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 82* ரன்களும், பிருத்வி ஷா 54 ரன்களும், டேவிட் வார்னர் 46 ரன்களும், பிலிப் சால்ட் 26* குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள், தவான் டக் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து பிராப்சிம்ரன் மற்றும் அதர்வா ஆகியோர் பந்துகளை நாலாபுறமும் சிதற விட்டனர்.
தொடர்ந்து பிராப்சிம்ரன் அக்ஷர் படேல் பந்தில் 22 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். 7 ஓவர் முடிவில் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.