பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியின் போது நடுவர் அலீம் தார் கடுப்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது.
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த பாகிஸ்தான் அணி 182 ரன்னுக்கு சுருண்டது. இதன்மூலம், 79 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து பேட் செய்து கொண்டிருக்கும் போது, நீயூசிலாந்து வீரர் அடித்த பந்து வாசிமிடம் சென்றது. உடனே அவர் எடுத்து அதனை பவுலர் திசையை நோக்கி எரிந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, பந்து நடுவர் அலீம் தாரின் கால் பகுதியில் பலமாக தாக்கியது.
இதனால், கடுப்படைந்த நடுவர் அலீம் தார் கையில் வைத்திருந்த பவுலரின் ஜெர்சியை தரையில் ஓங்கி வீசிவிட்டு சென்றார். பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் அவரை சூழ்ந்து கொள்ள, நசீம்ஷா நடுவர் அலீம் தாரின் காலை பிடித்து தேய்த்து கொடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.