நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் உம்ரான் மாலிக் மிரட்டலாக பந்துவீசி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் சேர்த்துள்ளது.
இதைத் தொடர்ந்து, 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் அறிமுக வீரர்களாக, அர்ஷிதீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
அதிக வேகம் போடக் கூடிய பவுலராக விளங்கி வரும் உம்ரான் மாலிக், தனது அறிமுகப் போட்டியின் 3வது ஓவரில் கான்வே-வின் விக்கெட்டை கைப்பற்றி, சர்வதேச அளவிலான முதல் விக்கெட்டை எடுத்து அசத்தியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், மின்னல் வேகத்தில் பந்து வீசி எதிரணியினரை திணற வைத்து வருகிறார். தான் வீசிய முதல் ஓவரில் அதிகபட்சமாக 149.6 KPH வேகத்தில் வீசினார். 2வது ஓவரில் 150 KPH வேகத்தில் வீசிய அவர், 3வது ஓவரில் அதையும் கடந்து 153 KPH வேகத்தில் வீசினார். இந்தப் பந்துக்கு முந்தைய பந்தில்தான் கான்வே-வின் விக்கெட்டை எடுத்தார். இதைத் தொடர்ந்து, மிட்சலின் விக்கெட்டையும் அவர் கைப்பற்றினார்.
உலகளவில் அதிவேகமான பந்தை வீசியவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் 161.3 KPH வீசியதே இதுநாள் வரையில் அதிகபட்சமாக திகழ்ந்து வருகிறது. இவரைத் தொடர்ந்து, அடுத்த 4 இடங்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பவுலர்களே உள்ளனர். ஷேன் டைட் (161.1), பிரெட் லீ (160.8), ஜெஃப் தோம்ஷன் (160.6), மிட்சல் ஸ்டார்க் (160.4) ஆகியோர் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் முகமது ஷமி (156.4) 9வது இடத்தில் உள்ளார். ஆனால், இவரது வேகத்தை இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் (157) வீசி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் விரைவில் அவரது அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வார் என்று இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.