செல்பி எடுக்க மறுத்ததால் ஆத்திரம்.. இந்திய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
16 February 2023, 4:00 pm

செல்பி எடுக்க மறுத்த இந்திய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ப்ருத்வீ ஷா. இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத நிலையில், உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடினார். இதனால், அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்தவர்கள் சிலர் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். இதற்கு கிரிக்கெட் வீரர் ப்ருத்வி ஷாவின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது ஓஷிவாரா போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!