வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை விரட்டியடித்த விராட் : புதிய சாதனை படைத்த இந்திய அணி!!!

வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை விரட்டியடித்த விராட் : புதிய சாதனை படைத்த இந்திய அணி!!!

உலகக் கோப்பையின் 17-வது போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பந்துவீச இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, வங்கதேசம் அணியின் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து அரைசதம் விளாசினார்கள்.

அதன்படி தன்சித் ஹசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்து இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் நஜ்முல் 8 , மெஹிதி ஹசன் மிராஸ் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். மத்தியில் இறங்கிய விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லாஹ் சற்று நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர். அதன்படி முஷ்பிகுர் ரஹீம் 38, மஹ்முதுல்லாஹ் 46 ரன்களை சேர்த்தனர்.

இறுதியாக வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 256 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணியில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது .இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். தொடக்க களமிறங்க இருவரும் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 48 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அதில் ஏழு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இவர்கள் இருவரின் கூட்டணியில் 88 ரன்கள் சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார். அரைசதம் அடித்த சில நிமிடங்களில் சுப்மன் கில் 53 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த போட்டி போல சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 2 பவுண்டரி உட்பட 19 ரன் எடுத்து வந்த வேகத்தில் வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலி தனது அனுபவத்தின் மூலமும், நிதானமான ஆட்டத்தின் மூலமும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினார்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 97 பந்தில் 103 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். அதில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியாக இந்திய அணி 41.3 ஓவரில் 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் விராட் கோலி 103* , கே எல் ராகுல் 34* ரன்னிலும் இருந்தனர். இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

20 minutes ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

23 minutes ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

1 hour ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

1 hour ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

2 hours ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

2 hours ago

This website uses cookies.