வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.
இதில், 2 போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ஸ்ரேயாஷ் ஐயர் 80 ரன்னும், பண்ட் 56 ரன்னும் எடுத்தனர்.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலி, வெறும் பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வருகிறார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், விராட் கோலிக்கு 80 மாதங்களுக்கு மோசமான ஒருநாள் கிரிக்கெட் தொடராக, இந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் அமைந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு விராட் கோலி விளையாடிய ஒரு நாள் தொடரில் குறைந்தபட்சம் ஒரு அரைசதமாவது அடித்து வந்தார். இந்த சூழலில், தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரது அதிகபட்ச ரன்களே 18ஆக உள்ளது.
முதல்போட்டியில் 8 ரன்களும், 2வது போட்டியில் 18 ரன்களும், 3வது போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 3 போட்டிகளில் சேர்த்து அவர் வெறும் 26 ரன்களே குவித்துள்ளார்.
கேப்டன் பொறுப்பு கோலியின் பேட்டிங்கை பாதிப்பதாகக் கூறியே அவரது கேப்டன் பதவியை பிசிசிஐ திரும்பப் பெற்றது. இந்த சூழலில், அவரது ஆட்டம் மீண்டும் மோசமானதாகவே இருப்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால், அவர் மீண்டு வருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
This website uses cookies.