சென்னை : தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, விராட் கோலிக்கு பெரும் தலைவலி உருவாகியுள்ளது.
இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சொற்ப ரன்னில் வெற்றியை இழந்தது. இதில், இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு, விராட்கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 பந்தில் 5 பவுண்டரியுடன் 65 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியை அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் வாமிகாவும் கண்டு களித்தனர்.
அவர் அரைசதம் அடித்த போது தனது குழந்தைக்கு இந்த அரைசதத்தை அர்ப்பணிப்பது போன்ற செயலில் ஈடுபட்டார். அது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, அவரது மனைவி மற்றும் குழந்தையின் முகம் மைதானத்தில் இருந்த கேமிராவில் பதிவாகியது. இதன்மூலம், கோலியின் முகம் முதல்முறையாக வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இதனை அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இருவரும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். அதில், “நேற்று போட்டி நடைபெற்ற மைதானத்தில் எங்களது குழந்தையின் முகம் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டதை அறிந்தோம். கேமரா எங்களது குழந்தையின் பக்கம் இருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை. எங்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டது. ஏற்கனவே கேட்டுக் கொண்டது போல, வாமிகாவை புகைப்படம் எடுக்கவோ, எடுத்ததை பொது வெளியில் பகிரவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நன்றி” என தெரிவித்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.