ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – பெங்களூரூ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக சாம் கரனும், பெங்களூரூ அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் செயல்பட்டுள்ளனர். டூபிளசிஸ் காயம் காரணமாக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரூ அணிக்கு விராட் கோலி – டூபிளசிஸ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்க விட்டு ரன்களை குவித்து வந்தனர்.
இந்த சூழலில் போட்டியின் 16வது ஓவரை பஞ்சாப் கேப்டன் சாம் கரன் வீசினார். அப்போது, அந்த ஓவரின் முதல் பந்தை டூபிளசிஸின் முகத்தை நோக்கி எறிந்தார். இதனால், வேகமாக வந்த பந்திடம் இருந்து தப்பிக்க முயன்ற டூபிளசிஸ் நிலைகுலைந்து கிழே விழுந்தார்.
பிறகு, நோ பால் வீசியதற்கு சாம் கரன், டூபிளசிஸிடம் மன்னிப்பு கோரினார். இருவரும் கைகுலுக்கி சமரசம் பேசிக் கொண்டனர். அப்போது, அங்கு வந்த விராட் கோலி, சாம் கரனை விளையாட்டாக அடிக்க கை ஓங்கினார்.
கிரிகக்கெட் வீரர்களிடையே காணப்பட்ட ஒற்றுமையை பார்த்து மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ந்து போகினர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.