உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஐசிசி Most Valuable Team என்ற பெஸ்ட் 11 என்ற அணியை தேர்வு செய்துள்ளது.
இதில் ஆறு நாடுகளைச் சேர்ந்த 11 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிசி யின் இந்த சிறந்த அணியின் கேப்டனாக ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி யின் இந்த பெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் ஹெல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நடப்பு டி20 உலக கோப்பையில் 212 ரன்கள் அடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஜாஸ் பட்லர் மற்றொரு தொடக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும். அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நடந்து முடிந்த தொடரில் 225 ரன்கள் அடித்திருக்கிறார்.
மூன்றாவது வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சேர்க்கப்பட்டிருக்கிறார். விராட் கோலி இந்த தொடரில் அதிகபட்சமாக 296 ரன்கள் அடித்திருக்கிறார். நான்காவது வீரராக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நடந்து முடிந்த தொடரில் அவர் 239 ரன்கள் விளாசி இருக்கிறார்.
ஐந்தாவது வீரராக நியூசிலாந்தை சேர்ந்த கிளன் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் 201 ரன்கள் அடித்திருக்கிறார். நடு வரிசையில் ஆறாவது வீரராக சிக்கந்தர் ராசாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வே சேர்ந்த அவர் நடந்து முடிந்த தொடரில் 219 ரன்களையும் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
ஏழாவது வீரராக பாகிஸ்தானை சேர்ந்த சதாப்கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பேட்டிங்கில் 98 ரன்களும், பந்துவீச்சில் 11 ரன்களும் அடித்திருக்கிறார். ஆல் ரவுண்டராக சாம் கரன் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் நடப்பு தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஒன்பதாவது வீரராக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் நோக்கியா சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 10வது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தின் மார்க் வுட், இந்த தொடரில் 9 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.
11 ஆவது வீரராக ஷாகின் ஷா ஆப்ரிடி சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் 11 விக்கெட் வீழ்த்திருக்கிறார். இந்த அணியின் 12 ஆவது வீரராக இந்தியாவின் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பேட்டிங்கில் 128 ரன்களும் பந்து வீச்சில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்:…
ரெட்ரோ பட விவகாரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "கங்குவா" படம் எதிர்பார்த்த அளவில்…
This website uses cookies.