குஜராத்-மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 35வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடந்து வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதலில் குஜராத் அணி விளையாடியது. ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்தது குஜராத்.
ஓபனரும் விக்கெட் கீப்பருமான ரித்திமான் சாஹா 4 ரன்களில் அர்ஜுன் டெண்டுல்கர் ஓவரில் நடைடையக் கட்டினார்.
ஷுப்மன் கில் மட்டும் நிதானமாக விளையாடிய அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 ரன்களிலும், விஜய் சங்கர் 19 ரன்களிலும் ஏமாற்றினர். டேவிட் மில்லர், அபினவ் மனோகர் நின்று விளையாடினர். அபினவ் அசத்தலாக சிக்ஸர்களை விளாசத் தொடங்கினார். ஆனால் அவரும் 42 ரன்களில் கேட்ச் ஆனார். அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் கடைசி ஓவரில் 46 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.
மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளையும் குமார் கார்த்திகேயா 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 207 ரன்களை எடுத்தது. 120 பந்துகளில் 208 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம் முதலே குஜராத் வீரர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசினர். முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே மும்பை எடுத்தது. இரண்டாவது ஓவரை கேப்டன் ஹர்திக் வீச, ரோகித் ஷர்மா அவர் கையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து இஷான் மற்றும் க்ரீன் ஆகியோர் சீரான ரன்களை எடுத்து வருகின்றனர். 5 ஓவர் முவில் ஒரு விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.